OPEN FORUM 82197 JP-G

 

திரு சி

திறந்த மன்றத்திற்க்கு வரவேற்க்கிறோம்.

 

அழைப்பவர்: 

வேதாகமத்தில் யாக்கோபு அதிகாரம் 2 வசனம் 14 முதல் 26 வரை விளக்கமுடியுமா? விசுவாஸம் செயலின்மையால் இறந்துவிடுகிறது என்றால் என்ன?

 

திரு சி

ஆம். விவிலியம் கூறுகிறது. யாக்கோபு 2:17- இல் "இதுபோலதான் விசுவாஸமும்,  செயலின்மையால், தனி யாக்கப்பட்டு இறந்துவிடுகிறது. விசுவாஸம் செயலின்மையால் இறந்துவிடுகிறது. நிச்சயமாக, எந்த செயல்களைப்  பற்றி தேவன் பேசுகிறார்? தேவனுக்கு பிடித்தமான செயல்களைப் பற்றி அவர் பேசுகிறார். எப்படிபட்ட விசுவாஸத்தைப் பற்றி அவர் பேசுகிறார்? ரட்சிக்கப்படக்கூடிய விசுவாஸம் வைத்துள்ளவர்களை, அதாவது யேசு கிறிஸ்து மேல் நம்பிக்கை வைத்துள்ளவர்களைப் பற்றி அவர் பேசுகிறார்.

 

இப்பொழுது சிலர் நான் நம்புகிறேன் என்று கூறுவர்.  நான் நம்புகிறேன் என்பதை இப்படியும் கூறலாம் எனக்கு நம்பிக்கை உண்டு. அல்லது நான்  தேவனை விசுவாஸிக்கிறேன். நான் நம்புகிறேன்.எனக்கு நம்பிக்கை உண்டு. நான்  தேவனை நம்பி உள்ளேன். ஏனென்றால், நான் அவரை ஏற்றுக் கொண்டுள்ளேன். மற்றும் நான் தேவாலயத்திற்க்கு அடிக்கடி செல்கிறேன். என்றாலும் அவர்கள் தங்களின் வாழ்க்கையை மிகவும் கூர்ந்து நோக்கினால், தங்களுடைய வாழ்க்கை, அவர்களை சுற்றியுள்ள  மற்ற கண்ணியமான தார்மீகமான, தாங்கள் தேவனின் குழந்தைகளென்று உரிமைக் கொண்டாடாதவர்களின் வாழ்க்கையைவிட மிகவும் மாறுப்பட்டதல்ல.

 

நீங்கள் கவனிக்கவும் நமக்கு உண்மையாக ரட்சிக்கப்படுத்தும் நம்பிக்கை உள்ளெனில், அது தேவனின் பரிசு. நம்முடைய ஆன்மாவிலிருந்து நம்மால் உருவாக்கப்பட்டதல்ல. அது தேவனின் பரிசாக பெறவேண்டும். ஆனால் நமக்கு உண்மையாக ரட்சிக்கப்படக்கூடிய நம்பிக்கை கொடுக்கப்பட்டால், அப்பொழுது நாம் புதிய ஜீவன்களாக ஆக்கப்பட்டோம் என்றுப் பொருள். அதாவது மிகவும் புதியதான உயிர்ப்பிக்கப்பட்ட ஆன்மாவைப்  பெற்றுள்ளோம்.

 

இப்பொழுது நம்முடைய புதிய உயிர்ப்பிக்கப்பட்ட ஆன்மாவோடு மீண்டும் பாவங்களை செய்ய விரும்பவில்லை.அதாவது ரட்சிக்கப்படாத இனியும் பாவங்களை செய்யத்  தூண்டும் உடலை பெற்றிருப்பினும். மிகவும் சுருசுருப்பான பெரிய தாக்கம் நமது தனித்தன்மையின் மீது உண்டாக்கி நான் பாபம் செய்யேன் என்ற தீர்மானம் வழங்குகிறது.

 

இப்பொழுது பாபம் செய்யாமை என்றால் என்ன? இது தேவனின் சித்தம்போல தேவனுக்கு பிடித்தமான முறையில் வாழ்வது.  மற்றும் தேவனுக்கு பிடித்தமான எதை செய்தாலும் அது ஒரு நல்ல செயல். ஆதலால் எனக்கு ரட்சிக்கப்படும் நம்பிக்கை உள்ளதால் இதற்க்கு சாட்சியம் நான் செய்யும் நல்ல செயல்கள். இல்லையேல் நான் ரட்சிக்கப்பட்டதால், தேவனால் தரப்பட்ட ரட்சிக்கும் நம்பிக்கையின் காரணத்தினால், நான் நல்ல செயல்கள் செய்வேன். தேவனின் சித்தப்படி நான் செய்வது என் புதிய இயல்பு ஆகும் .

 

எவரேனும் ஒ நான் தேவனை நேசிக்கிறேன் , நான் தேவனை  நம்பி உள்ளேன், நான் என் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்துள்ளேன், என்  நம்பிக்கை மிகவும் வலிது என்று கூறினாலும் வாழ்க்கை முறையில் ரட்சிக்கப்படுவதற்க்கு முந்தைய வாழ்க்கைவிட, மிகவும் மாறுப்படாத வாழ்க்கையை வாழ்ந்து வந்தால், நிச்சயமாக அவருடைய இனத்தை சார்ந்த மற்ற கண்ணியமான தார்மீகமான தேவனிடம் உறுதி செய்யாதவறுமானவர்களின்  வாழ்க்கையிலிருந்து சிறிதளவும் மாற்றம் இல்லையெனில், அவரின் வாழ்வில் நல்ல செயல்கள் இல்லை என்று குறிக்கப்படுக்கிறது.அவனுக்கு தேவனின் சித்தப்படி செயல்பட தொடர்ச்சியான ஆழமான விருப்பம் இல்லை. அதனால் தம்மிடம் உள்ளதென நம்பும் விசுவாஸம் அது இறந்துவிட்ட விசுவாஸம் ஆகும். அது மேலோட்டமானது. அவன்  கிறிஸ்து விடம் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக தன்னையே சிறுமை படுத்திக் கொள்ளுகிறான்.