Open
Forum 122898 K
திறந்த
மன்றத்திற்க்கு
வரவேற்க்கிறோம் .
அழைப்பவர்:
மக்கள் தாங்கள்
இறந்தபின், ஆன்மீகமாக
இறந்தபின், கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ள
முடியும் என்று எப்படி
நம்புவர்?
திரு
சி: அவர்கள் நம்பலாம், ஏனென்றால்
அது போன்ற மீட்புத் திட்டத்தை
அவர்கள் விரும்புகிறார்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால்
ரட்சிக்கப்படுவோம்
என்ற எண்ணம் விவிலியத்தில்
காணப்படவில்லை.
அந்த எண்ணத்தை
அனுசரித்து செல்ல
தேவைப்படும் முதல்
கோட்பாடு என்னவெனில்
ஒவ்வொரு மானிடனின்
பாவங்களுக்கு
சம்பளமாக கிறிஸ்து
சிலுவைக்கு சென்றார், மற்றும் அது
பிழையானது. அது முற்றிலும்
தவறு. விவிலியம்
அது போல போதிப்பதில்லை, ஆனாலும் அவர்களுக்கு
சித்தாந்த கோட்பாடு
தேவை, ஏனென்றால்
அவர்கள் கூறுகிறார்கள்
கிறிஸ்து அவர்
தம் பங்கை செய்துவிட்டார், உங்களின்
பாவங்களுக்கு
அவர் சம்பளம் கொடுத்துவிட்டடார், ஆனால் அதை
ஏற்றுகொள்ளவேண்டியது
உங்களை பொறுத்தது.
வெளிப்படையாக, இது முழுவதுமாக
தவறு. இந்த
மீட்புத் திட்டம் உங்களை
சொர்கத்துக்கு
அழைத்து செல்லாது.
இது மனித வகையான
மீட்பு, ஆகையால் அதே
தேவாலயங்களில்
மக்கள் எப்பொழுதும்
வீழ்கிறார்கள்.
அவர்கள் கிறிஸ்துவை
ஏற்றுக் கொள்கிறார்கள்
மற்றும் வீழ்கிறார்கள்.
அழைப்பவர்:
நீங்கள் கூற கேட்டுள்ளேன்
அதாவது ஆண்டவரை
நாம் முழு மனதுடன்
தேடினால், நாம் அவரை
காணலாம், ஆனால் ஆன்மீகமாக
இறந்தபின் நாம்
எவ்வாறு அவரை தேடவோ அல்லது
வேறு ஏதேனும் செய்யவோ முடியும்?
திரு
சி: மரணத்திலிருந்து
வாழ்க்கைக்கான
மாற்றம் உடனடியாக
நடப்பது அல்ல.
மீட்பு கிடைக்கும்
நேரத்தில், நாம் நம்முடைய
புதிய உயிர்தெழுந்த
ஆன்மாக்களையும், நித்ய ஜீவனையும்
பெறுகிறோம். மற்றும் நாம்
எப்பொழுதும் வீழ்ச்சி
அடையோம். ஆனால்
மீட்பு அடையும் நேரத்திற்க்கு
முன்பு, ஆண்டவர் நம்மை
அழைத்து வரலாம்.
யோவான் 6:44 ஒரு முக்கியமான
வசனமாகும்.
"என்னை அனுப்பியவர்
அந்த பிதாதான். அவரே மக்களை
என்னிடம் அழைத்து
வருகிறவர். நான்
இறுதி நாளில் அவர்களை
எழுப்புவேன்"”
நாம்
இந்த வசனத்தை பிலிப்பியர்
2:13 கூட இணைக்கும்போது
"தேவன் உங்களில்
பணியாற்றுகிறார். அவர் தம்முடைய
தயவுள்ள சித்தத்தின்படி
விருப்பத்தையும்
செய்கையும் உங்களில்
உண்டாக்குகிறார்."
அப்பொழுது
ஆண்டவர் நமக்கு
தரும் ஒரு உதாரணம்
ரட்சிக்கப்படுவதற்க்கு
வெகு முன்பே மிகவும்
பக்தியுள்ள ரோமப்
படை அதிகாரிப் பற்றியதாகும்.
அவர் தானம் செய்தார்.
ஆண்டவரை துதித்தார்
மற்றும் ஆண்டவரிடம் அச்சம்
கொண்டிருந்தார். நாம்
அப்போஸ்தலர் 10:1-2-ல் படிக்கிறோம்.
செசரியா
நகரில் கொர்நேலியு
என்னும் மனிதன்
இருந்தான். ரோமப்படையில்
இத்தாலிய வகுப்பில்
அவன் ஒரு படை அதிகாரியாக
இருந்தான். கொர்நேலியு
நல்ல பக்தியுள்ள
மனிதன். அவனும்
அவன் வீட்டில்
வாழ்ந்த எல்லா மக்களும்
உண்மையான தேவனை வணங்கினர்.
தன் பணத்தின் பெரும்பகுதியையும்
அவன் ஏழை மக்களுக்கு
கொடுத்தான் மற்றும்
தேவனிடம் எப்போதும்
பிரார்த்தனை செய்து
கொண்டிருந்தான்.
இந்த
மொழி ரட்சிக்க்ப்பட்ட
ஒருவருடையது என்று
சாதாரணமாக எடுத்துகொள்ளப்படும், ஆனால் அவன்
நிச்சயமாக ரட்சிக்கப்படவில்லை.
ஆண்டவர் அவனை அழைத்து
வருகிறார். ஆண்டவர்
அவருடைய சித்தத்தை
இந்த மனிதனின்
வழ்க்கையில், அவன் மறு பிறப்பதற்க்கு
முன்பாக செய்கிறார்.
இந்த மனிதன் சம்பந்தமாக, எந்த கணம்
அவன் ரட்சிக்கப்பட்டான்
என்று நாம் அறிவோம், அது, பேதுரு சுவிசேஷத்துடன்
அவனிடம் வந்தபோது
ஆகும். ஆண்டவர்
அழைத்துவரும்
பல மக்கள் உண்டு.
அவர்கள் தங்களுடைய
பாவங்களிருந்து
மாறத் தொடங்கலாம்.
மற்றும் ஆண்டவரை
அதிகமாக பணிய விரும்பலாம்.
ஆண்டவரின்பால்
அச்சம் அவர் ஆன்மாவில்
உண்டு. அவர்கள்
ஆண்டவரை தங்கள்
முழுமனதுடன் முறையிடுவார்கள்
மற்றும் ஆண்டவரின் கருணையை
கோறுவார்கள். இது
சம்பவித்தால், இது ஆண்டவர்
அவர்களின் வாழ்க்கையை
நடத்தி செல்வதால் மட்டுமே.
இதற்க்காக அவர்கள்
தங்களை பெருமை
படுத்திக்கொள்ள
முடியாது. இந்த
விஷயங்களால் மட்டும அவர்களை
ரட்சிக்க இயலாது. இவை மூலமாக
ஆண்டவர் அவர்களை
ரட்சிப்பதில்லை. இவை ஆண்டவர்
அவர்களை அழைத்து
வருகிறார் என்பதற்கான
எளிமையான குறிப்புகள்.
அவர்தம் கர்த்தரின்
மேல் விசுவாஸம்
நம்மை ரட்சிக்கிறது.
அழைப்பவர்:
எனக்கு பிரியமான
பலர் அற்புத இயக்கத்தில்
உண்டு. மற்றும்
அவர்கள் ரட்சிக்கப்படவில்லை என்ற
எண்ணம் நம்ப எனக்கு
கடினமாக உள்ளது
ஏனென்றால் நான் அவர்களை
மிகவும் நேசிக்கிறேன். இதுதான் நீங்கள்
போதனை செய்கிறீர்களா? ஆண்டவருக்கு
மட்டும் யார் ரட்சிக்கப்பட்டனர்
என்று தெரியும்.
திரு
சி: ஆண்டவர் நமக்கு
குறிப்புகள் அவசியமாக
தருகிறார். பண்டைய
இஸ்ரவேல் தேசத்தை
ஒரு உதாரணமாக
எடுத்து கொள்ளுங்கள்.
அங்கு பக்தியுள்ள
மற்றும் நல்ல மக்கள்
வனாந்தரத்தில்
வாழ்ந்து வந்தனர்.ஆனால்
நம்பிக்கை இன்மையால்
அவர்கள் மரித்தனர்.
இது சரித்திரத்தில்
எந்த கால கட்டத்திற்க்கும்
பொருந்தும். தங்களுடைய
பாவங்களுக்கக
மரித்த பல மக்கள்
மிகவும் அழகானவர்கள்
மற்றும் எல்லாம்
சரியாக
உள்ளது என்று நினைக்கிறார்கள.
மத்தேயு 7:21-23 -இல் யேசு தரும்
எச்சரிக்கை நினைவுப்
படுத்திக்கொள்ளுங்கள்.
என்னை
தம் கர்த்தர் என்று
கூறும் எல்லோரும்
பரலோகத்திற்க்குள்
நுழைய முடியாது.
பரலோகத்திலுள்ள
என் பிதா விரும்பும்
செயல்களை செய்கிறவர்கள்
மட்டுமே பரலோக
ராஜ்யத்தில் நுழைய
முடியும். இறுதி
நாளன்று பலர் என்னிடம்
நீரே எங்கள் கர்த்தர்.
உம்மை போற்றினோம்.
அசுத்த ஆவிகளை
உம் பெயரால் விரட்டினோம்.
அற்புதங்கள் பல
செய்தோம் என்று
கூறுவார்கள். அவர்களிடம்
நான் என்னை விட்டு
விலகுங்கள். தவறு
செய்தவர்கள் நீங்கள்.
உங்களை எனக்கு
தெரியாது. என்று
வெளிப்படையாக
சொல்வேன்.
அது கேடானது!
அது அச்சம் தரக்கூடியது!
விவிலியம் கூறுகிறது
வெளிப்படுத்தின விசேஷம்
22- இல் அதாவது
நாம் இந்நூலில்
உள்ள தீர்கதரிசன
சொற்களுக்கு
எதையாவது
கூட்டினால், இந்நூலில்
எழுதபட்டிருக்கிற
துன்பங்களை தேவன்
அவன் மேல் கூட்டுவார்.
ஆதலால் ஆண்டவரின்
விளக்கத்தின்படி அவர்கள்
விவிலியத்தில
எழுதப்பட்ட துன்பங்ளுக்கு, அதாவது ஆண்டவரின்
கோபத்திற்க்கு
உள்ளாவர். நாம் அவர்களை
மாற்றமுடியாது.
ஆண்டவரால் மட்டுமே
மாற்றமுடியும்.
பெருமகிழ்ச்சியாக
நாம் தொடர்ந்து அவர்களுக்காகத் துதிக்க
முடியும்.