TAMIL SANGAM - RAMANATHAPURAM
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
மூவந்தரும் அற்றுச்
சங்கமும் போய் பதி
மூன்றொரு எட்டுக்
கோவேந்தரும் அற்று
மற்றொரு வேந்தர்
கொடையும் அற்றுப்
பாவந்தர் காற்றில்
இலவம் பஞ்சாகப்
பறக்கையிலே
தேவேந்திரத் தாரு ஒத்
தாய் ரகுனாத
செய துங்கனே
-படிக்காசுப் புலவர்
இராமநாதபுரம் நகரில் ஆண்டுதோறும் தமிழ் விழாக்களைத் தவறாமல் நடத்தி, தமிழிக்கு உழைத்த தயாளர்களின் நினைவையும், பணியையும் போற்றி இளந் தலைமுறையினர்க்கும், மாணவ மாணவிகளுக்கும் இனம் காட்டி வருகிறோம்.
மேலும் பள்ளி மாணவ மாணவியருக்குப் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாடற் போட்டிகள் நடத்திப் பரிசுகளும், பாராட்டிதழ்களும் வழங்கி அவர்களின் மொழிப் பற்றை ஊக்குவித்து வருகிறோம்.
இத்துடன் அனைத்து மக்களுக்கும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காக நமது இலக்கிய விழாக்களில் கவிஅரங்கம், கருத்தரங்கம், உரைஅரங்கம், நூல் வெளியீட்டரங்கம் ஆகியவைகளை அமைத்து வழங்கி வருகிறோம்
-எங்கள் நிறுமுனர்தம் எழுத்தில் இருந்து
சில வரிகள். . .