|
மகாபாரதகாலத்து புதுதில்லி திரு அனுமார் கோயில் புராணமான தில்லி பாரதப்போருக்கு புறப்படும் முன் பீமனால் நிறுவப்பட்ட பைரவர் கோயில் புராணா கிலா பகுதியில் உள்ளது. இது மிக பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இதை தவிர சமகாலத்தை சார்ந்ததாக கருதப்படும் மற்ற கோயில்கள் தருமரால் நிறுவப்பட்ட நிகம்போத் காட்டில் உள்ள "நீலே சத்ரி மந்திர்" என்று வழங்கப்படும் சிவன் கோயில், கால்காஜியில் உள்ள அம்பாள் கோயில், மெஹ்ரோலியில் உள்ள யோகமாதா கோயில், புது தில்லியிலுள்ள பால அனுமான் கோயில் ஆகியவை. பீமனும் அனுமனும் மகாபாரதகாலத்தில் பாண்டவர்கள், கௌரவர்களின் கட்டாயத்தால் வனவாசம் சென்றனர். கானகத்தில் அவர்கள் இருந்தப் போது பாஞ்சாலி மிக நளினமான சுகந்தமான வாசனை குறிப்பிட்ட திசையிலிருந்து வருவதை உணர்ந்து பீமனிடம் கூறினாள். அவ்வாசனை தெய்வீக மலரான சௌகந்திகாவிலிருந்து வருவதாக பீமன் கூறினான். தனக்கு அம்மலர் வேண்டுமென பாஞ்சாலி வேண்டினாள். பீமன் சுகந்தமான வாசனை எங்கிருந்து வருகிறதோ அந்த திக்கில் பயணித்தான். பீமன் சென்ற பாதையில் நடுவில் தடங்கலாக ஒரு வானரம் படுத்திருந்தது. பீமன் தான் சௌகந்திகா புஷ்பத்தினை தேடி செல்வதாகவும் வானரத்தை வழி விடுமாறும் கூறினான். தான் ஒரமாக படுத்திருப்பதால் காட்டு பாதையில் நடக்க தான் தடங்கலாக இல்லை என்று கூறியது அவ்வானரம். இதை கேட்ட பீமன் வெகுண்டான். தான் முதியவன் என்பதால் தன் வாலை கூட தான் நகர்த்தமுடியவில்லை அதனால் தன் வாலை நகர்த்திவிட்டு மேலே செல்லக்கூறியது அவ்வானரம். அவ்வானரத்தின் வாலினை நகர்த்திவிட்டு மேலே செல்ல பீமன் தலைப்பட்டான். ஆனால் வானரத்தின் வாலினை பீமனால் நகர்த்த முடியவில்லை. பீமன் என்றாலே பலசாலி என்றுப் பொருள். அவனாலேயே நகரத்த முடியவில்லை என்றவுடன் அவனுக்கு அவ்வானரம் யார் என்று புரிந்து விட்டது. தனது ஆணவத்தை குறித்து வருந்தினான், மன்னிப்புக் கேட்டான். ஆணவமற்ற வலிமையே வலிமை மிக்கது என்பது பீமனுக்கு புரிந்தது. வாயுவின் அம்சமான அனுமாரை, ஆணவம் நீங்கிய பீமன் வணங்கி ஆசிகள் பல பெற்றான். கன்னாட்ப்ளேஸ் அனுமான் கோயில் கோயிலை சுற்றி என்றும் திருவிழா கோலம் தான். பெண்களுக்காக நிறைய வண்ணங்களில் வளையல்கள் விற்கும் நூற்றுக்கும் மேலான கடைகள். மான்சிங், ஜெய்சிங் காலத்தில் ராஜஸ்தானிலிருந்து இங்கு வந்து நிலைத்துவிட்ட கலை மெஹன்தி. பெண்கள் தங்கள் கைகளில் அலங்காரமாக பல வித டிஸைன்களில் மருதாணி இட்டுக் கொள்ளுகிறார்களே அதை தான் மெஹன்தி கலை என்கிறார்கள். அப்படிப் பட்ட மெஹன்தி கடைகள் நூற்றுக்கும் மேல் இங்குள்ளது. தில்லியில் பல இடங்களிலிருந்தும் பெண்கள் இப்பொழுதும் இதற்காகவே இங்கு வருகிறார்கள். சாதாரணமாக சூரியனின் பிம்பமோ அல்லது ஓங்கார பிம்பமோ தான் வட இந்திய கோயில்களின் கோபுரங்களின் மேல் காணப்படும். ஆனால் இக்கோயில் கோபுரத்தில் சந்திர பிரபை பிம்பம் காணப்படுவது விசேடமாக கூறப்படுகிறது. மற்றும் இடைவிடாது "ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்" என்ற ராமநாம ஜபம் இடைவிடாது ஆகஸ்ட் 1, 1964 முதல் நடைப்பெறுகிறது. இச்சாதனை ஜின்னீஸ் புக் ஆப் ரெகார்டில் இடம் பெற்றுள்ளது. கோயிலின் அமைப்பு நுழைந்ததும் இடது புறத்தில் வடக்கு நோக்கிய சன்னதியில் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட அருமையாக மூர்த்தங்கள், தென்னிந்திய பாணியிலே இருக்கிறது. விசாரித்ததில் கடந்த பல வருடங்களாக அருகில் உள்ள தென்னிந்தியர்கள் மார்கழி மாதம் வரும் அனுமாரின் ஜயந்தியை இங்கே கொண்டாடுவார்களாம். பூசைகள் செய்தும் பலருக்கு அன்னமிட்டும் கொண்டாடுவார்களாம். சற்ற அருகில் ஸ்ரீவேணுகோபாலனும் ராதையும் நாம் தரிசித்து விட்டு அடுத்ததாக ஸ்ரீஇராம தர்பாரில் ஸ்ரீராமர், சீதாமாதா, இளவள், அனுமார் நமக்கு அருள் பொழிவதையும் தரிசிக்கிறோம். ஸ்ரீராம தர்பாருக்கு வலது புறமாக சற்றே தள்ளி "ஸ்ரீபால அனுமார்" காட்சி தருகிறார். பால அனுமானின் வடிவம் இந்த அருமையான காட்சி சிறுவனாக - பாலனான அனுமார் சூரியனை கனியென்று நினைத்து வௌதயிடை தாவியதை நினைவு படுத்துகிறது. பாலனான இருந்த போதிலும் எப்படிப் பட்ட காரியம் செய்திருக்கிறான். இந்த சிறுவனை, பால அனுமாரை நோக்கும் கால், சாம்பவான் வாயிலாக கம்பர் அனுமாரை போற்றியது நினைவுக்கு வருகிறது. "மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர் அனுமாரால் முடியாது எதுவும் இல்லை. அவரை உளமாற நினைத்தால் நமக்கு நடாக்காதது எதுவும் இல்லை. அனுமரின் புகழ் பாடுவோம், நல்லதை நினைப்போம் ஆனந்தத்தில் திளைப்போம். ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .
சிவ ஒளி மாதஇதழில் (டிசம்பர் 2008) வெளிவந்துள்ளது காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே
you are with
vhayusudha: home page at though the intention of this site is to
propagate the glory of Lord Anjaneya, kindly note that no material
appearing in these pages could be reproduced in any manner without
explicit permission from us. |