இராமநாதபரம் தமிழ்ச் சங்கம்

சேதுநாட்டு வரலாற்றுச் செம்மல் திரு.சே.மு.கமால்
அவர்களால் 1985-ஆம் ஆண்டு துவங்கப் பெற்றது.

அந்தந்த மாதங்களில் தமிழ் அறிஞர்களின் பிறந்த மற்றும்
நினைவு நாட்களைச் சிறப்பிக்கும் வகையில் தவறாமல்
திங்கள்தோறும் நடக்கும் முத்தமிழ் முற்றங்கள்.

இவை அல்லாது ஆண்டுதோறும் நடக்கும் பெருவிழாக்கள்.

1. பாரதி விழா
2. சங்க ஆண்டு விழா
3. வள்ளல் அமரர் குழந்தைச் செட்டியார் நினைவு விழா
4. தமிழ்ப் புத்தாண்டு விழா
5. மகளிர் விழா

 

செந்தமிழ் வளர்க்கும் சீரிய பணியில் . . .

சமயப் பொறையும் மத நல்லிணக்கமும் கொண்டு வள்ளுவரின் வாய்மொழி ஏற்று பாரதியின் பாதையில் நடக்கும் எம் தமிழ்ச் சங்கம் அனைத்து மக்களையும் இணைக்கும் ஓர் அகண்ட பாரத்த்தின் சிறு தீபச் சுடர்.

இதன் பிரகாசம் சற்றும் குறையாமல், சிறிதும் அணையாமல் கட்டிக் காக்கும் அனைத்து கொடையாளிகளுக்கும், வள்ளல்களுக்கும் எம் நன்றிகள்.

                           -தமிழ்ச் சங்ம உறுப்பினர்கள்